Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’திருச்சி சிவாவை நான்கு அறை அறைந்தேன்’ - சசிகலா புஷ்பா

’திருச்சி சிவாவை நான்கு அறை அறைந்தேன்’ - சசிகலா புஷ்பா
, ஞாயிறு, 31 ஜூலை 2016 (09:06 IST)
டெல்லி விமான  நிலையத்தில் திருச்சி சிவாவை தான் நான்கு முறை தாக்கியதாக அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.


 

நேற்று பிற்பகல் 2.45 மணி அளவில் டெல்லி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு வருவதற்காக திருச்சி சிவாவும், சசிகலா புஷ்பா தமது குடும்பத்தினருடனும் காத்திருந்து உள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
இதற்கிடையில், சசிகலா புஷ்பா தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ”அதிமுக ஆட்சியையும், முதலமைச்சர் ஜெயலலிதாவையும் குறித்து தவறாக பேசியதால் தான் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதானால், தான் நான்கு அறை அறைந்ததாகவும்” கூறியுள்ளார்.
 
இது குறித்து கூறியுள்ள திருச்சி சிவா, “விமான நிலையத்தில் நடந்து வந்து கொண்டிருந்த என்னை, சசிகலா புஷ்பா திடீரென தாக்கினார். எதற்காக என்னை தாக்கினார் என்று எனக்கே தெரியவில்லை. அவரின் தாக்குதலுக்கான காரணம் குறித்து, அறிய முயன்று வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
 
சசிகலா புஷ்பா ஏற்கனவே திருச்சி சிவாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தது. ஆனால் இந்த படங்கள் மார்பிங் செய்யப்பட்டவை என திருச்சி சிவா தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நச்சு இருமல் மருந்து ஊழல், ஐந்து பேருக்கு சிறை