Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடக்கி வாசிக்கவே நினைத்தேன்.. ஆனால்? - சீறும் கமல்ஹாசன்

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2017 (13:53 IST)
சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள் குறித்து தனது கருத்தை தெரிவித்து வருகிறார்.


 

 
இந்நிலையில், கமல்ஹாசனுக்கும், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமிக்கும் இடையே பனிப்போர் தொடங்கியது.  தமிழர்களை பொறுக்கி எனவும், கமல்ஹாசனை படிப்பறிவில்லாத முட்டாள் எனவும் சுப்பிரமணியசுவாமி விமர்சித்தார். இதற்கு, நெட்டிசன்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். 
 
அதேபோல், அரசியல் பற்றி கமலுக்கு என்ன தெரியும் என அமைச்சர் செங்கோட்டையன் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், மக்களை வன்முறைக்கு தூண்டும் விதமாக கமல் கருத்து தெரிவிக்கிறார் என அவர் மீது அதிமுக சார்பில் போலீசாரிடம் புகார் மனுவும் அளிக்கப்பட்டது. மேலும், அவரின் நற்பணி மன்ற இயக்க பொறுப்பாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் இதுபற்றி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன் “ இனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம்  இயக்கப் பொறுப்பாளரின் கைது பேசவைக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் சில கருத்துகளையும் பதிவு செய்துள்ளார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments