தமிழ்நாடு அரசின் வரி வருவாயும் உயர உதவிட வேண்டுகிறேன்- முதல்வர்

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (18:46 IST)
சிறு வணிகர்கள் பயன்படக்கூடிய வகையில் சமாதான திட்டத்தை இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்து வைத்தார்.

இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் சமூக வலைதள பக்கத்தில்,   

‘’அரசுக்கு வணிகர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பாக 2,11,607 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வணிகவரித் துறையின் பணிச்சுமை அதிகரித்திருப்பதோடு வணிகர்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதைக் களைய, தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக சிறுவணிகர்களுக்கு வரி நிலுவைத் தொகையை முழுவதுமாகத் தள்ளுபடி செய்யும் அறிவிப்பைச் சட்டமன்றத்தில் செய்தேன்.

இத்தகைய சிறுவணிகர்கள் தவிர பிற வணிகர்களும் நான்கு வரம்புகளாகப் பிரிக்கப்பட்டு அவர்களுக்குரிய தள்ளுபடிகளை அறிவித்தேன்.

இலட்சக்கணக்கானோர் பயன்பெறும் வகையிலான இந்த முன்னோடி முயற்சியை வணிகப் பெருமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, தங்களின் தொழில்வளத்துடன் தமிழ்நாடு அரசின் வரி வருவாயும் உயர உதவிட வேண்டுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் இருக்கும் இலங்கை பெண்ணிடம் இந்திய பான் அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை வந்தது எப்படி? அதிர்ச்சி தகவல்..!

விஜய்யை விமர்சனம் செய்து யூடியூபில் வீடியோ பதிவிட்டவர் மீது தாக்குதல்.. 4 பேர் கைது..!

கோவில் கருவறைக்குள் செல்ல மறுத்த கிறிஸ்துவ அதிகாரி பணிநீக்கம் செல்லும் - உச்ச நீதிமன்றம்

இனிமேல் அவசர வழக்கு என எதுவும் கிடையாது: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி அதிரடி..!

தமிழகத்தில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னம்.. சென்னைக்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments