Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் ஆவதே லட்சியம் : நடிகர் கஞ்சா கருப்பு

Webdunia
செவ்வாய், 10 மே 2016 (10:09 IST)
தமிழக முதலமைச்சர் ஆவதே தனது லட்சியம் என்று தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு கூறியுள்ளார்.


 

 
சட்டசபை தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், நடிகர் கஞ்சா கருப்பும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். திருச்செங்கோடு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முத்துமணிக்கு ஆதரவாக இவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
 
திருச்செங்கோடு மதிமுக ஒன்றிய முன்னாள் செயலாளரான முத்துமணிக்கு இந்த முறை அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் அவர் சுயேட்சையாக நிற்கிறார்.
 
அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் கஞ்சா கருப்பு செய்தியாளர்களிடம் போசும் போது “ வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்ய பல்வேறு கட்சிகளிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் நான் மறுத்துவிட்டேன். முத்துமணி கட்சி ஆரம்பித்தால் நானும், நடிகை ஷகிலாவும் அவரது கட்சியில் இணைந்து பணியாற்றுவோம்.
 
எனக்கும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அப்படி நடந்தால் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, மதிய உணவின் போது ஒரு முழு கோழி வழங்கப்படும். 
 
சுயேட்சை வேட்பாளர் முத்துமணி வெற்றி பெற்றால் அனைத்து நதிகளும் இணைக்கப்படும். படிப்பறிவு இல்லாததால் பலர் என்னை ஏமாற்றி விட்டனர். அதனால் கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றிவிட்டனர்.
 
எனவே நான் முதலமைச்சரானால் தமிழக மக்களுக்கு இலவச கல்வி வழங்க ஏற்பாடு செய்வேன்” என்று கூறினார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments