Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு எதிரிகளே இல்லை; எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது - விஜயகாந்த் சவால்

Webdunia
புதன், 11 மே 2016 (15:42 IST)
எந்த கொம்பனாலும் என்னை அசைக்க முடியாது. மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி பாடுபடுவேன். எனக்கு எதிரிகளே இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தான் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
 
அப்போது பேசிய விஜயகாந்த், ‘’நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன். இந்த பூமி அனைத்தும் விவசாய பூமியாகும். ஆனால் இங்கு விவசாயம் சரியாக நடைபெறவில்லை. இங்குள்ள கிராமங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது.
 
என்னை பற்றி கேட்டுப்பாருங்கள், விருத்தாசலம், ரிஷிவந்தியம் ஆகிய பகுதிகளில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்தேன். அதேபோல் இங்கும் நான் வெற்றி பெற்று வந்ததும் மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்க செய்து, குடிநீர் பஞ்சத்தை போக்குவேன்.
 
நீங்கள் யாரையும் பார்த்து பயப்பட வேண்டாம். உங்களுக்காக நான் இருக்கிறேன். எந்த கொம்பனாலும் என்னை அசைக்க முடியாது. மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி பாடுபடுவேன். எனக்கு எதிரிகளே இல்லை.
 
எனக்கு அதிமுக, திமுக, பாமக தொண்டர்கள் யாரும் எதிரிகள் கிடையாது. அவர்களது கட்சிகளின் தலைமையே எனக்கு எதிரிகள் ஆவர். ஆறு கட்சி கூட்டணியான எங்களுக்கு எப்பொழுதும் ஏறுமுகம்தான்” என்று கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments