நான் சீட்டுக்காக வரவில்லை. நாட்டுக்காக வந்துள்ளேன்-கமல்ஹாசன்

sinoj
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (19:59 IST)
18 வது மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
 
இந்த நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரம்  மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்தியா கூட்டணியில் உள்ள திமுக கூட்டணியில்  மதிமுக, விசிக , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இந்த நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
 
இன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார்.
 
அப்போது அவர் கூறியதாவது:  ''நான் சீட்டிற்காக வரவில்லை. நாட்டிற்காக வந்துள்ளேன். திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியாவின் நுழைவுவாயிலாக தமிழ் நாடு இருந்திருக்கும். உங்கள் மனங்களிலும் எனக்கும் இடமுண்டு. உங்கள் இல்லங்களிலும் எனக்கு இடமுண்டு என்பதை அறிவேன். தமிழ் நாடு மக்களுக்கும் இந்தியாவுக்கும்  எனக்கும் உள்ள காதல் சாதாரணமான  காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது'' என்று கூறினார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சென்ற பாஜக எம்பி ஹேமாமாலினி கார் விபத்து.. என்ன நடந்தது?

விஜய் வந்தாலே மாநாடுதான்! 10 ஆயிரம் பேர்னு ஏன் சொன்னீங்க! - தவெக நிர்வாகிகளிடம் நீதிபதி கேள்வி!

கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றபோது, ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை? நீதிமன்றம் சரமாறி கேள்வி..!

பிரச்சாரத்திற்கு அனுமதி வாங்க வேண்டாம்! எல்லாத்தையும் நிறுத்தும் விஜய்? - நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

கரூரில் பாஜக தன் விளையாட்டை தொடங்கிவிட்டது! - திருமாவளவன் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments