Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்வாண பூஜை நடத்தி 8 பேரை கொன்று புதைத்தேன் - வாலிபர் அதிர்ச்சி தகவல்!

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (20:25 IST)
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரைச் சேர்ந்த தங்கதுரை (35) கடந்த 7-ந் தேதி திடீரென மாயமானார்.


 
 
கடந்த 9-ந்தேதி திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரம் பத்தாளப்பேட்டை என்ற இடத்தில் வாய்க்கால் ஒரத்தில் தங்கதுரை நிர்வாண நிலையில் கொன்று புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். இந்நிலையில், காவல்துறையினர் விசாரணையில் தங்கதுரையின் நண்பர் சப்பாணி, தங்கதுரையின் நகைக்காக ஆசைப்பட்டு அவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்நிலையில், சப்பானி திருவெறும்பூர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 
 
வாக்குமூலத்தில் சப்பானி கூறியதாவது. “எனது தந்தை தேக்கன், தாய் கருப்பாயி. எனக்கு திருமணமாகி மோகனப்பிரியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். வயலில் கூலி வேலைக்கு சென்று வந்த நான் பணம் இல்லாமல் சிரமப்பட்டேன். இந்த நிலையில் எங்கள் பகுதியில் குடும்ப பிரச்சனை காரணமாக கோவிலுக்கு வரும் நபர்கள் நகையுடன் வருவதை பார்த்து அதை அபகரிக்க திட்டமிட்டேன். அவர்களிடம் நைசாக பேச்சுக் கொடுத்து தனக்கு தெரிந்த இடத்தில் புதையல் இருப்பதாகக்கூறி அதனை எடுக்க பூஜை செய்ய வேண்டும் என்று கூறினேன். அதை நம்பி வருபவர்களை காட்டு பகுதிக்கு அழைத்து சென்று நிர்வாண பூஜை செய்து அவர்கள் கண்களை மூடி சாமி கும்பிடும் போது பின்னால் நின்று தலையில் தாக்கி கொலை செய்து நகை, பணத்தை அபகரித்துக் கொள்வேன். 
 
எனது செயல் பிடிக்காமல் மனைவி மோகனப்பிரியா வேறு ஒரு நபருடன் வீட்டை விட்டு ஓடி விட்டார். அப்போதுதான் எனது பழைய நண்பரான தங்கதுரையும் குடும்ப பிரச்சனை இருப்பதாக கூறினார். அவரையும் பிரச்சனை தீர நிர்வாண பூஜை செய்ய வேண்டும் என்று கூறி அழைத்து சென்று அடித்துக் கொலை செய்து நகையை அபகரித்தேன். அதன் பிறகு அவரை வாய்க்காலில் புதைத்தேன்.” என்றார். 
 
இதில் தனது தந்தையையும் சப்பாணி கொன்று புதைத்திருப்பது தெரியவந்துள்ளது. சப்பாணியின் செயலை கண்டித்ததால் அவரை சப்பாணி கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. மெலும், சப்பாணியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் ஏஐ தொழில்நுட்ப திட்டம்.. ஓபன் ஏஐ சி.இ.ஓவை சந்திக்கும் பிரதமர் மோடி..!

அமெரிக்க கப்பல்களுக்கு இனி கட்டணம் இல்லை... மிரட்டலுக்கு பணிந்தது பனாமா நாடு..!

கை, கால்களில் விலங்கு மாட்டி இழுத்து செல்லும் அமெரிக்கர்கள்! இந்தியர்களை இப்படி நடத்துவதா? - அதிர்ச்சி அளிக்கும் வீடியோ!

அமெரிக்காவில் இருந்து திரும்பிய இந்திய இளைஞர்கள்.. 60 லட்சம் வரை செலவு செய்ததாக அதிர்ச்சி தகவல்..!

கிணற்றில் விழுந்த 64 வயது கணவரை தன்னந்தனியாக காப்பாற்றிய 56 வயது மனைவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments