Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’நீங்கள் நினைத்தபடி என்னால் படிக்க முடியாது’ - கடிதம் எழுதிவிட்டு மாணவன் தற்கொலை

Webdunia
புதன், 14 ஜனவரி 2015 (16:39 IST)
நீங்கள் நினைத்தபடி என்னால் படிக்க முடியாது’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவன் தற்கொலை தூக்கிட்டு செய்து கொண்டுள்ளார்.
 
கோவை, ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த விஜயகுமார் வாஜ்பாய் என்பவர் வனக்கல்லூரியில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். இவரது மகன் நிகேஷ் வாஜ்பாய் (22) பீளமேட்டிலுள்ள தனியார் கல்லூரியில், மூன்றாம் ஆண்டு, பி.எஸ்சி., இயற்பியல் படித்து வந்துள்ளார்.
 
அவரது பெற்றோர் மேற்படிப்பாக, எம்.எஸ்.சி.தான் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு, தனி அறையில், மாணவர் படித்து கொண்டிருந்த நிகேஷ், நேற்று காலை தூக்குப் போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. 
 
தகவலறிந்த சாயிபாபா காலனி காவல் துறையினர், அங்கு சென்று சடலத்தை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் நடத்திய விசாரணையின்போது மாணவர் அறையில் ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது.
 
அந்த கடிதத்தில், 'உங்கள் விருப்பப்படி என்னால் எம்.எஸ்.சி. படிக்க முடியாது. பயமாக இருக்கிறது. என்னை மன்னித்து கொள்ளுங்கள். நீங்கள் யாரும் இதற்காக சண்டை போடக்கூடாது; சாரி' என எழுதி வைத்துள்ளார்.
 
தற்கொலை செய்து கொள்ளும் முன்பு, தூக்கிட்டு கொள்வது குறித்து, தனது மடிக்கணினி மூலம் இணையத்தளத்தில் படம் பார்த்துள்ளார். இன்டர்நெட்டில் பார்த்தது போன்று, கயிறு கட்டி, தூக்கில் தொங்குவது போன்று, மொபைல் போனில் படம் எடுத்துள்ளார். அதனை தனது நண்பர்களுக்கு 'வாட்ஸ்அப்'பில் அனுப்பி விட்டு அழித்ததும், விசாரணையில் தெரியவந்துள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments