Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நா.முத்துக்குமாரின் மகனை யார் தேற்றுவார்? : கோ 2 இயக்குனர் வேதனை

நா.முத்துக்குமாரின் மகனை பற்றி கவலைப்படும் கோ 2 இயக்குனர்

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2016 (14:58 IST)
கவிஞரும், சினிமா பாடலாசிரியருமான நா.முத்துகுமார் உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் மரணம் அடைந்தார்.


 

 
அவரின் மரணம் குறித்து அவருடன் பணியாற்றிய கோ-2 படத்தின் இயக்குனர் சரத் வேதனை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
 
நா.முத்துக்குமார் ஒரு சிறந்த பாடலாசிரியர். நான் அவரை எப்போதும் சரஸ்வதி புத்திரா என்றுதான் அழைப்பேன். அர்த்தம் புதைந்த வார்த்தைகளின் தொழிற்சாலை அவர். பில்லா-2 பட நாட்களில் இருந்தே அவரை எனக்கு தெரியும். அவர்தான் அந்த படத்தின் எல்லா பாடலையும் எழுதினார்.
 
நான் இயக்கிய கோ 2 படத்திற்கு மொத்தம் 3 பாடல்கள் எழுதிக் கொடுத்தார். அவை மூன்றுமே வைரங்கள்.  வைரம் போல் அவர் பாடல்களும் என்றுமே நிலைத்திருக்கும். 
 
அவர் மரணம் அடைந்ததை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அவரின் மகனை நினைத்தால்தான் எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. அவருக்கு மகன் என்றால் உயிர். எங்கு சென்றாலும் தன்னுடன் அழைத்து செல்வார். அவரின் மகனுக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும் கடவுள்தான் அளிக்க வேண்டும்” என்று வேதனையுடன் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது ஏன்? பிரேமலதா விளக்கம்..!

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

காவல்துறையை நிர்வகிக்க தெரியாத பொம்மை முதல்வர்: சிவகங்கை கஸ்டடி மரணம் குறித்து ஈபிஎஸ்..!

திமுக ஆட்சியில் கஸ்டடி மரணங்களை பெரிய பட்டியலே போடலாம்! - தவெக கண்டன அறிக்கை!

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

அடுத்த கட்டுரையில்
Show comments