Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்: பொன்.ராதாகிருஷ்ணன் சவால்

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2016 (04:09 IST)
நான், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேச பதில் அளித்துள்ளார்.
 

 
கன்னியாகுமரியில், சம்ஸ்கார்பாரதி என்ற அமைப்பு சார்பில் கன்னியாகுமரியில் இருந்து கர்நாடக மாநிலம் கோக்கர்ணம் வரை பாரத பண்பாட்டு கலாசார ஒருமைப்பாட்டு யாத்திரை தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது தான் ஜல்லிக்கட்டு விளையாட்டு நிறுத்தப்பட்டது.  தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிறுத்தப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி தான் முழுக்க, முழுக்க காரணம்.
 
இது காங்கிரஸ் கட்சி செய்த தவறுதான் பாஜக அரசின் தவறு அல்ல.  எனவே காங்கிரஸ் செய்த தவறுக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியும் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
 
அவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புகேட்டால், நானும் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயராகவே உள்ளேன் என்றார். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments