Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்: பொன்.ராதாகிருஷ்ணன் சவால்

நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்: பொன்.ராதாகிருஷ்ணன்  சவால்
, திங்கள், 4 ஜனவரி 2016 (04:09 IST)
நான், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேச பதில் அளித்துள்ளார்.
 

 
கன்னியாகுமரியில், சம்ஸ்கார்பாரதி என்ற அமைப்பு சார்பில் கன்னியாகுமரியில் இருந்து கர்நாடக மாநிலம் கோக்கர்ணம் வரை பாரத பண்பாட்டு கலாசார ஒருமைப்பாட்டு யாத்திரை தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது தான் ஜல்லிக்கட்டு விளையாட்டு நிறுத்தப்பட்டது.  தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிறுத்தப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி தான் முழுக்க, முழுக்க காரணம்.
 
இது காங்கிரஸ் கட்சி செய்த தவறுதான் பாஜக அரசின் தவறு அல்ல.  எனவே காங்கிரஸ் செய்த தவறுக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியும் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
 
அவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புகேட்டால், நானும் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயராகவே உள்ளேன் என்றார். 

Share this Story:

Follow Webdunia tamil