Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழம்பில் உப்பு - காரம் இல்லாததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

குழம்பில் உப்பு - காரம் இல்லாததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்
, சனி, 27 ஜூன் 2015 (16:12 IST)
குழம்பில் உப்பு, காரம் சரியாக போடாததால் மனைவியிடம் தகராறு செய்த இளைஞர் மனமுடைந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருநின்றவூர், அந்தோணி நகர் 2-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் தியாகராஜன் (35). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி  பிரியா. 2 குழந்தைகள் உள்ளனர். நேற்றிரவு தியாகராஜன் சாப்பிடும்போது, ‘குழம்பில் உப்பும் காரமும் இல்லையே, என்ன சமைச்சிருக்கே?’ என்று  மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
 
இன்று அதிகாலை பிரியா எழுந்து வெளியே வந்தார். அப்போது வீட்டின் உத்திரத்தில் தியாகராஜன் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி  அடைந்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று, தியாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil