Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவிக்கு மேட்ரிமோனியலில் மாப்பிள்ளை பார்த்த கணவர்!

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (09:29 IST)
மனைவிக்கு மேட்ரிமோனியில் மாப்பிள்ளை பார்த்த கணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திருவள்ளூரை சேர்ந்த ஓம் குமார் என்பவருக்கும் ஜான்சி என்பவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் அமெரிக்கா சென்ற இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்தது
 
இந்த நிலையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்தியா திரும்பிய ஓம்குமார் ஜான்சியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். விவாகரத்து கிடைக்க தாமதம் ஆனதை அடுத்து அவர் மனைவிக்கு மாப்பிள்ளை தேடி மேட்ரிமோனியில் இணையதளத்தில் விளம்பரம் செய்தார்
 
இது குறித்து அறிந்த ஜான்சியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து ஓம் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கட்டிய மனைவிக்கு மாப்பிள்ளை தேடி மேட்ரிமோனியல் இணையதளத்தில் விளம்பரம் கொடுத்த கணவரால் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்த் பிறந்தநாளை குறிவைத்த விஜய்! மதுரை மாநாட்டை ஒத்திவைக்க போலீஸ் அழுத்தம்! - தவெக முடிவு என்ன?

12,000 ஊழியர்கள் பணி நீக்கம் அறிவிப்பு: டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 28,148 கோடி சரிவு!

காரை ஏற்றி இளைஞர் கொலை! சரணடைந்த திமுக பிரமுகரின் பேரன்! - வாக்குமூலத்தில் சொன்னது என்ன?

என்ன பண்றது கஷ்டமாதான் இருக்கு..! 15 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது குறித்து Microsoft CEO!

இந்தியாவுக்கு 25% வரி விதிப்பேன்: மீண்டும் மிரட்டிய டிரம்ப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments