Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரதட்சணைக்காக கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கணவன்

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (12:29 IST)
தஞ்சையில் வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மனைவியை கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மானம்புசாவடி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம்(30). இவரது மனைவி காயத்திரி (23). காயத்ரி கர்ப்பமாக இருந்துள்ளார்
 
சுந்தரம் காயத்ரி வீட்டாரிடம் இருசக்கர வாகனம் வாங்கித் தரக் கோரியும், புதிதாக வீடு கட்ட பணம் வாங்கி வரும்படியும் காயத்ரியிடம் கேட்டுள்ளார். இதனால் சுந்தரத்திற்கும் காயத்திரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் நேற்று இரவு சுந்தரத்துக்கும் - காயத்திரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுந்தரம் காயத்ரியை தாக்கியுள்ளார். படுகாயமடைந்த காயத்ரி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து சுந்தரத்தை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2035ஆம் ஆண்டில் டாக்டர்கள், மருத்துவர்கள் தேவைப்பட மாட்டார்கள்.. பில்கேட்ஸ் கணிப்பு..!

சர்க்கரை நோயை மாத்திரை மருந்தில்லாமல் குணப்படுத்திய அமித்ஷா.. 2 மணி நேரம் 6 மணி நேரம் ரகசியம்..!

70 வயது முதியவரை அடித்து இழுத்து சென்ற மருத்துவமனை.. அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

அடுத்த கட்டுரையில்
Show comments