Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுக்குக் கூப்பிட்ட குடிகார கணவர் – மறுத்த மனைவிக்கு நேர்ந்த கொடூரம் !

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (09:46 IST)
குடிகார கணவரோடு சேர்ந்து வாழ மறுத்த மனைவியைக் கணவன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபி. இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மோகனேஸ்வரி என்ற பெண்ணுடன் காதல் திருமணம் நடைபெற்றது.. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கோபியின் குடிப்பழக்கத்தால் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை வர ஆரம்பித்துள்ளது.

இதனால் கோபியை பிரிந்த மோகனா, தன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகனாவை தனியாக சந்தித்த கோபி அவரை தன்னோடு வாழ அழைத்துள்ளார். ஆனால்  அதற்கு மோகனா சம்மதிக்காமல் வர மறுத்துள்ளார். இதனால் கோபமான கோபி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மோகனாவைக் குத்திவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.

இந்நிலையில் அக்கம்பக்கதினர் வந்து பார்த்தபோது சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து காவல்துறை கோபி மேல் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments