Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவன் கொடுமையால் தற்கொலை செய்த பெண்: வீடியோவால் பரபரப்பு

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (17:13 IST)
வீடியோ வெளியிட்டும் யாரும் காப்பாற்ற வராததால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வேலூர் திருபத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த சத்யா என்ற பெண், தன்னை கணவரிடமிருந்து காப்பாற்ற கோரி  வீடியோ ஒன்றை வெளியிட்டார்,  அந்த வீடியோவில் முகம், உடம்பில் ரத்த காயங்கலுடன் சத்யா இருந்தார். தனது கணவர் தன்னையும் தனது குழந்தையும் கொடுமை படுத்துவதாகவும். அவரிடம் நாங்கள் நரக வாழ்க்கை வாழ்வதாகவும், எங்களை யாராவது வந்து காப்பாற்றுங்கள் என கண்ணீர் மல்க பேசியிருந்தார்.
 
இந்நிலையில் சத்யா கடந்த 25ஆம் தேதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவர் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் சத்யாவின் கனவரை கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments