Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கணவன் கொடுமைப்படுத்தியதால் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மனைவி: கணவனுக்கு 7 ஆண்டு சிறை

கணவன் கொடுமைப்படுத்தியதால் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட  மனைவி: கணவனுக்கு 7 ஆண்டு சிறை
, செவ்வாய், 3 மார்ச் 2015 (08:51 IST)
சென்னை, தேனாம்பேட்டையில், கணவனின் கொடுமையால், மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை மகளிர் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
தேனாம்பேட்டை திரு.வி.க., குடியிருப்பைச் சேர்ந்தவர் 32 வயதுடைய ராஜா. இவரது மனைவி 25 வயதுடைய செண்பகவள்ளி இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.
 
தேனாம்பேட்டை பகுதியில் ராஜா பெட்டிக் கடை நடத்தி வந்தார். செண்பகவள்ளி, தேனாம்பேட்டையிலுள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார்.
 
இந்நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம், செண்பகவள்ளி வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
 
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது, இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த, சென்னை மகளிர் அமர்வு நீதிமன்ற நீதிபதி மீனா சதீஷ் தீர்ப்பு கூறினார்.
 
அந்தத் தீர்ப்பில், "செண்பகவள்ளியை அவரது கணவர் ராஜா, சந்தேகத்துடன் ஒவ்வொரு நாளும் கொடுமைப்படுத்தியால், மனமுடைந்த செண்பகவள்ளி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.
 
இதற்கான சாட்சியங்கள், ஆவணங்கள் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே கணவர் ராஜாவுக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது" என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil