Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்குழந்தை பிறக்காததால் மனைவிக்கு எச்.ஐ.வி ஊசி போட்ட கணவர்!

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (18:54 IST)
திருமலையில் உள்ள குண்டூர் பகுதியில் ஆண் குழந்தை பிறக்கவில்லை என்பதால், மனைவிக்கு எச்.ஐ.சி ஊசி போட்ட கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் திருமலை குண்டூரில் உள்ள பகுதியில் உள்ள தாடேப்பள்ளியில் வசிப்பவர் சரண்(35). இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு மாதவி(32) என்பவருடன் திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு தற்போது 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், சரணின் 2 தம்பிகளுக்கும் ஆண் குழந்தைகள் உள்ளதால் தனக்கும் ஆண் பிறக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்துள்ளார்.

இந்த  நிலையில், சமீபத்தில், தன் மனைவிக்கு ஒரு மருத்துவர் மூலம் ஊசி செலுத்தியுள்ளார். இதனால் உடற் சோர்வு அடைந்த அவர் வேறு மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொண்டபோது அவருக்கு எச்.ஐ.வி இருப்பதாக தகவல் தெரிந்தது.

இதையடுத்து, போலீஸார் சரணைக் கைது செய்து, இதுகுறித்து உண்மை கண்டறியும்  போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

Edited By Sinoj

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments