Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவி நடத்தையில் சந்தேகம்: பெற்ற குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை

மனைவி நடத்தையில் சந்தேகம்: பெற்ற குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை
, வெள்ளி, 10 ஜூன் 2016 (16:30 IST)
தி்ருவண்ணாமலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பெற்ற 2 வயது குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.


 

 
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தேவராஜ் தனது மனைவி கோமதியின் சொந்த ஊரான கிருஷ்ணகிரியில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஷாலினி என்ற 6 வயது மகளும், சதீஷ் என்ற 2 வயது மகனும் உண்டு. தேவராஜுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, அவரது இரண்டாவது குழந்தை சதீஷ் அவருக்கு பிறக்கவில்லை என்றும் கோமதியுடன் அடிக்கடி சண்டை போடு வந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று முன்தினம் தேவராஜ் சதீஷை தூக்கிக்கொண்டு சென்றவர், நேற்று காலை சதீஷ் கிணற்றில் இறந்து கிடப்பதாக போனில் தொடர்ப்பு கொண்டு கோமதியிடம் கூறியுள்ளார்.     
 
இதையடுத்து  சதீஷின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. தேவராஜை காவைதுறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் தேவராஜ் சதீஷை கிணற்றில் வீசி கொன்றதாக உண்மையை ஒப்புக்கொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யுவராஜை கொல்ல முயற்சி - வி.சி. கட்சி பிரமுகர் உட்பட 2 பேர் கைது