Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசியில் எஜமானை குதறிய நாய்கள்

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (12:51 IST)
வேலூர் மாவட்டத்தில் நாய்களுக்கு உணவு அளிக்க தாமதமானதால் பசியில் இருந்த நாய்கள் உணவளிக்க சென்ற எஜமானை கடித்து குதறின.   
 

 

 
வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள காட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கிருபாகரன்(56) என்பவர் சென்னையில் ரயில்வே பாதுகாப்பு ஜஜி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
 
கிருபாகரன், அவரது மாந்தோப்பில் நாய்கள் வளர்த்து வந்தார். தினமும் வேலை முடிந்து திரும்பியதும் இரவு 8 மணிக்கு மாந்தோப்பில் உள்ள நாய்களுக்கு இறைச்சி, மற்றும் உணவு வழங்குவது வழக்கம். 
 
வழக்கத்தை விட சற்று தாமதமாக இறைச்சி, உணவுடன் சென்ற கிருபாகரனை 2 நாய்களும் பாய்ந்து சென்று அவரை கடித்து குதறின. எஜமான் என்றும் பாராமல் அவரை கடித்து குதறியதில் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இது பற்றி தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கிருபாகரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments