Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நரபலி கொடுக்கப்பட்டதாக மேலும் ஒருவர் புகார்

நரபலி கொடுக்கப்பட்டதாக மேலும் ஒருவர் புகார்
, திங்கள், 5 அக்டோபர் 2015 (18:22 IST)
மதுரை மேலுர் அருகே பிஆர்பி கிரானைட் நிறுனத்தினர் நரபலி கொடுக்கப்பட்டதாக மேலும், ஒருவர் சகாயம் குழுவினரிடம் புகார் அளித்துள்ளார்.


 

 
மேலூர் அருகே புறாக்கூடு மலைப்பகுதியில் நரபலி கொடுக்கப்பட்டதை தான் பார்த்ததாக கோரி மதுரை கீழவளவு வாச்சாம்பட்டியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் சகாயம் குழுவினரிடம் புகார் அளித்துள்ளார்.
 
இந்த புகார் குறித்து ஸ்டாலினிடம் கீழவளவு காவல் நிலையத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து புறாக்கூடு மலைப்பகுதியில் வருவாய் மற்றும் காவல் துறையினர் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
 
ஏற்கனவே, சேவற்கொடியான், வீரம்மாள் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் சின்னமலம்பட்டியில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மனநலம் பாதிக்கப்பட்ட 9 பேரின் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil