Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக்கூடங்களில் +2 மதிப்பெண் சான்றிதழ் 21 ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது

Webdunia
திங்கள், 12 மே 2014 (11:27 IST)
+2 மதிப்பெண் சான்றிதழ் 21 ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களில் வழங்கப்படுகிறது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் +2 தேர்வு நடைபெற்றது. 8 லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுதினார்கள். அந்த தேர்வு முடிவு கடந்த 9 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த வருடம் வரலாறு காணாத வகையில் தேர்ச்சி சதவீதம் 90.6 ஆக உயர்ந்தது.
 
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 113 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தன. அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்தது.
 
+2 தேர்வு முடிவு வெளியானதும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண்களை கொண்டு மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், என்ஜினீயரிங் படிப்புகளான பி.இ., பி.டெக். முதலிய படிப்பில் சேர விண்ணப்பித்து வருகிறார்கள். எப்போது மதிப்பெண் சான்றிதழ் கொடுக்கப்படும் என்று +2 மாணவர்கள் எதிர்பார்த்தனர். +2 மதிப்பெண் சான்றிதழ் 21 ஆம் தேதி முதல் அவரவர் படித்த பள்ளிக்கூடங்களிலேயே வழங்கப்பட உள்ளது.
 
இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

Show comments