Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 கார்கள், 4 லாரிகள், ஒரு பேருந்து.. அடுத்தடுத்து 13 வாகனங்கள் மோதி விபத்து.. ஓசூர் அருகே பயங்கரம்..!

Siva
ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (18:10 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 8 கார்கள், 4 லாரிகள், ஒரு பேருந்து என அடுத்தடுத்து 13 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி  தேசிய நெடுஞ்சாலை நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஓசூர் அருகே பேரண்டபள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 13 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 8 கார்கள் நான்கு லாரிகள் மற்றும் ஒரு பேருந்து என அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன

அடுத்தடுத்து 13 வாகனங்கள் ஒரே சாலையில் மோதிக்கொண்டதை அடுத்து தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை இந்த விபத்தில் உயிரிழந்தவர் குறித்த எந்த தகவலும் இல்லை என்பது ஆறுதலாக இருந்தாலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுடைய நிலை என்ன என்பதை இன்னும் சில மணி நேரத்தில் மருத்துவர்கள் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்


Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்.. அரசுக்கு ஆசிரியர்கள் கடிதம்..!

22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் அதிக வெப்பம்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஒரே நேரத்தில் வெடித்த ஏராளமான பேஜர் கருவிகள்.. 2750 பேர் காயம்.. 8 பேர் பலி..!

இன்று காலை 10 மணிக்குள் எந்தெந்த மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை! பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments