Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞானவாபி மசூதியின் வளாகத்துக்குள் இந்துக்கள் வழிபாடு- சீமான் கருத்து

Sinoj
வியாழன், 1 பிப்ரவரி 2024 (21:09 IST)
உத்தரப்பிரதேசத்திலுள்ள ஞானவாபி மசூதியின் வளாகத்துக்குள் இந்துக்கள் வழிபாடு செய்யலாம் எனும் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவானது அதிர்ச்சியளிக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 

''உத்தரப்பிரதேசத்திலுள்ள கியான்வாபி மசூதியின் வளாகத்துக்குள் இந்துக்கள் வழிபாடு செய்யலாம் எனும் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவானது அதிர்ச்சியளிக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமர் கோவிலைக் கட்டி பெரும் அநீதியை பல கோடிக்கணக்கான இசுலாமிய மக்களுக்கு பாஜக அரசு விளைவித்திருக்கும் தற்சமயத்தில், கியான்வாபி மசூதி விவகாரத்திலும் சிக்கலை உருவாக்குவது போல அமைந்திருக்கிறது வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பு.
 
நாடு விடுதலைபெற்றபோது இருந்த வழிபாட்டுத்தலத்தின் மதத் தன்மையை மாற்ற எந்தவொரு வழக்கையும் தொடுக்க முடியாது என வழிப்பாட்டுத்தலங்கள் சட்டம் – 1991 ஆனது தெளிவுப்படுத்துவதால் கியான்வாபி மசூதி குறித்த வழக்குகளைத் தள்ளுபடி செய்வதே சட்டத்தின் வழியேயான சரியான முடிவாகும். அதனை விடுத்து, கியான்வாபி மசூதிக்குள் இந்துக்கள் எனப்படுவோர் வழிபாடு செய்ய அனுமதிப்பது சனநாயக விரோதம் மட்டுமல்ல; சட்ட விரோதமுமாகும். பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்ற வழக்கு, உரிமையியல் வழக்கென இரண்டிலும் நீதி நிலைநாட்டப்படாது, தவறான முன்னுதாரணத்தை பெருங்கறையாக வரலாறு பதிவுசெய்திருக்கும் நிலையில், தற்போது வந்திருக்கும் வாரணாசி நீதிமன்றத்தின் முடிவும் அவ்வகையினதேயாகும். ஒருவேளை, பாபர் மசூதி போல, கியான் வாபி மசூதியும் மதவாதிகளின் சதிச்செயலுக்கு இரையாகுமானால், இந்தியப்பெருநாடு பிளவுபட்டு பேரழிவைச் சந்திக்குமென எச்சரிக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவுக்குள் 6 மாவட்டங்களில் கனமழை! ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

மொட்டை மாடியில் நின்ற என்னை பார்த்து கொண்டே சுய இன்பத்தில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரர்.. இளம்பெண் அதிர்ச்சி பதிவு..!

குழந்தைகள் சாப்பிடும் இனிப்பு மிட்டாய்களில் கஞ்சா கலப்பா? - அதிர்ச்சி தகவல்!

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து சரியானதுதான்.. ஒரு வழியாக ஒப்புக்கொண்டது காங்கிரஸ்..!

போபாலில் ‘லவ் ஜிஹாத்’ கும்பல்: நண்பராக நெருங்கி, பலாத்காரம் செய்து, மிரட்டும் மோசடி!

அடுத்த கட்டுரையில்
Show comments