Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் பெயரில் உணவகமா?? இருக்கக் கூடாது..! – இந்து அமைப்புகள் எதிர்ப்பு!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (11:16 IST)
கோவையில் பெரியார் பெயரில் உணவகம் திறப்பதற்கு இந்துமத அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே அமைந்துள்ளது கண்ணாரபாளையம் கிராமம். இந்த கிராமத்தில் “தந்தை பெரியார் உணவகம்” என்ற பெயரில் புதிய உணவகம் திறக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

பணிகள் முழுவதுமாக முடிந்து இன்று உணவகம் திறப்பு விழா நடைபெற இருந்தது. இந்நிலையில் அங்கு வந்த இந்து அமைப்பை சேர்ந்த சிலர், பெரியார் பெயர் கொண்ட உணவகத்தை திறக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ALSO READ: எஸ்.டி.பி.ஐ. கட்சி அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை: கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் எழுந்த நிலையில் இந்து அமைப்பின் உணவகத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சில பகுதிகளில் பெரியார் சிலைக்கு காவி வண்ணம் பூசுதல் போன்ற செயல்களால் பரபரப்பு எழுந்த நிலையில், தற்போது பெரியார் பெயரை உணவகத்திற்கு வைக்கக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments