Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் பெயரில் உணவகமா?? இருக்கக் கூடாது..! – இந்து அமைப்புகள் எதிர்ப்பு!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (11:16 IST)
கோவையில் பெரியார் பெயரில் உணவகம் திறப்பதற்கு இந்துமத அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே அமைந்துள்ளது கண்ணாரபாளையம் கிராமம். இந்த கிராமத்தில் “தந்தை பெரியார் உணவகம்” என்ற பெயரில் புதிய உணவகம் திறக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

பணிகள் முழுவதுமாக முடிந்து இன்று உணவகம் திறப்பு விழா நடைபெற இருந்தது. இந்நிலையில் அங்கு வந்த இந்து அமைப்பை சேர்ந்த சிலர், பெரியார் பெயர் கொண்ட உணவகத்தை திறக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ALSO READ: எஸ்.டி.பி.ஐ. கட்சி அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை: கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் எழுந்த நிலையில் இந்து அமைப்பின் உணவகத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சில பகுதிகளில் பெரியார் சிலைக்கு காவி வண்ணம் பூசுதல் போன்ற செயல்களால் பரபரப்பு எழுந்த நிலையில், தற்போது பெரியார் பெயரை உணவகத்திற்கு வைக்கக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments