Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனடாவில் இந்து கோயில்கள் தாக்குதல்: அர்ஜூன் சம்பத் தலைமையில் 11 பேர் போராட்டம்..!

Mahendran
வெள்ளி, 8 நவம்பர் 2024 (12:07 IST)
கனடாவில் உள்ள இந்து கோவில்கள் தாக்கப்பட்டதற்கு, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்பட 11 பேர் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு கனடாவில் இந்து கோயில் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி இதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் இதுகுறித்து தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், கனடாவில் இந்து கோயில்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெரும் அளவில் இந்து மக்கள் கட்சியினர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உதவி ஆணையர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
 
ஆனால் அர்ஜுன் சம்பத் உள்பட 11 பேர் மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில், அர்ஜுன் சம்பத்தின் கார் ஓட்டுநரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது கார் சாலையில் கேட்பாறற்று இருந்தது. அதன்பிறகு, காரை போலீசார் ஓரமாக நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments