Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிர்பிரிந்தாலும் ஒன்றாய் இணைந்த நண்பர்கள்! – அரியலூரில் நெகிழ செய்த சம்பவம்!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (12:05 IST)
அரியலூரில் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்த இந்து – முஸ்லீம் நண்பர்கள் ஒரே நாளில் இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டத்தில் ஜூபிலி ரோட்டில் டீக்கடை நடத்தி வந்தவர் மகாலிங்கம். இவரும் டீக்கடைக்கு எதிரே உள்ள வீட்டில் வசிக்கும் இஸ்லாமியரான ஜெயிலா புதின் என்பவரும் நீண்ட நாள் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். ஒருவர் வீட்டு விசேசத்தில் மற்றொருவரின் குடும்பத்தினர் கலந்து கொண்டு பணிகள் செய்யுமளவு நெருக்கமான நண்பர்களாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மகாலிங்கம், ஜெயிலா புதின் இருவருக்குமே உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முதலில் மகாலிங்கமும் அரை மணி நேரத்தில் ஜெயிலா புதினும் உயிரிழந்துள்ளனர். ஒன்றாக உயிரிழந்த நண்பர்களின் நட்பை கண்டு அப்பகுதி மக்கள் வியப்பும், வருத்தமும் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments