Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்து முன்னணி தலைவர்களுக்கு கொலை மிரட்டல் கடிதம்

இந்து முன்னணி தலைவர்களுக்கு கொலை மிரட்டல் கடிதம்
, சனி, 29 ஆகஸ்ட் 2015 (03:31 IST)
சென்னையில் உள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகத்திற்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
இந்து முன்னணி தலைமை அலுவலகம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு சமீபத்தில் ஒரு கடிதம் வந்தது. அதைப் பிரித்து பார்த்த அலுவலக நிர்வாகிகளுக்கு கடும் அதிர்ச்சி.
 
காரணம், அந்த கடிதத்தில், சென்னையில் உள்ள 2 தலைவர்கள் மற்றும் கோவையில் உள்ள 2 தலைவர்களை விரைவில் கொலை செய்வோம் என எழுதப்பட்டு இருந்தது. இந்த கடிதம் அனுப்பிய நபர் பெயர் மற்றும் முகவரி ஏதும் அதில் தெரிவிக்கப்படவில்லை.
 
இதனையடுத்து, இந்த கடிதம் குறித்து, சென்னை மாநகர இந்து முன்னணி செயலாளர் முருகேசன், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சென்னை உள்ள மாநில இந்து முன்னணி தலைமை அலுவலகத்திற்கு அடிக்கடி மிரட்டல் கடிதங்கள் வருவது வாடிக்கையாக உள்ளதால், இந்த அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல் கடிதத்திற்கு, இந்து முன்னணி மாநில அமைப்பாளர் இராம.கோபாலன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil