Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் ஆர்ப்பாட்டம்!

J.Durai
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (15:01 IST)
இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,மாநிலம் தழுவிய  ஆர்ப்பாட்டம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. 
 
இதன் ஒரு பகுதியாக  இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் கோவை மாநகர் சார்பாக செஞ்சிலுவை சங்கம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் மாவட்ட தலைவர்  விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற இதில், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ் கோட்ட  செயலாளர் பாபா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து  சிறப்புரையாற்றினர்..
ஆர்ப்பாட்டத்தில்,
 
ஓலா ஹீப்பர் போன்ற
போன்ற வாகனங்களால் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது,
எனவே அவைகளை முறைப்படுத்த வேண்டும்.
 
ஆட்டோ டிரைவர்களின் FCக்கு ஆந்திராவில் வழங்குவது போல் பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
 
ஆட்டோ தொழிலாளர்கள் இறந்து போனால்  அவரது  குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
 
ஆட்டோ ஓட்டுநர்கள் மீது பல பொய் வழக்குகள் போடப்படுவதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் அந்த நிலையை உடனே காவல்துறை கைவிட வேண்டும் உள்ளிட்ட 
பல்வேறு  கோரிக்கைகள்  வலியுறுத்தப்பட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments