Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் ஆர்ப்பாட்டம்!

J.Durai
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (15:01 IST)
இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,மாநிலம் தழுவிய  ஆர்ப்பாட்டம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. 
 
இதன் ஒரு பகுதியாக  இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் கோவை மாநகர் சார்பாக செஞ்சிலுவை சங்கம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் மாவட்ட தலைவர்  விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற இதில், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ் கோட்ட  செயலாளர் பாபா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து  சிறப்புரையாற்றினர்..
ஆர்ப்பாட்டத்தில்,
 
ஓலா ஹீப்பர் போன்ற
போன்ற வாகனங்களால் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது,
எனவே அவைகளை முறைப்படுத்த வேண்டும்.
 
ஆட்டோ டிரைவர்களின் FCக்கு ஆந்திராவில் வழங்குவது போல் பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
 
ஆட்டோ தொழிலாளர்கள் இறந்து போனால்  அவரது  குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
 
ஆட்டோ ஓட்டுநர்கள் மீது பல பொய் வழக்குகள் போடப்படுவதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் அந்த நிலையை உடனே காவல்துறை கைவிட வேண்டும் உள்ளிட்ட 
பல்வேறு  கோரிக்கைகள்  வலியுறுத்தப்பட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுக்கடைகளை மூடினால் எத்தனை விஜய் வந்தாலும் கவலையில்லை: திருமாவளவன்

வேலை செய்யும் பெண் ஊழியர்களை பட்டதாரியாக்கிய திருப்பூர் நிறுவனம்.. குவியும் வாழ்த்துக்கள்..

சிறையில் இருந்து விடுதலையாகிறார் கெஜ்ரிவால்.! சிபிஐ வழக்கில் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்..!!

தினமும் 2 கிலோ இறைச்சி சாப்பிடும் பாடி பில்டர்.. 36 வயதில் மாரடைப்பில் மரணம்..!

தலைமைச் செயலகத்தில் பெண் செய்தியாளருக்கு மிரட்டல்.. குவியும் கண்டனங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments