Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அதிகபட்ச மழை பொழிவு எங்கு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (11:43 IST)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணமேல்குடியில் 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணமேல்குடியில் 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. மேலும் சிவகங்கை, மதுரை புலிப்பட்டியில் தலா 12 செ.மீ., திருச்சி, வாத்தலை, பொன்னமராவதி, நத்தத்தில் 11 செ.மீ. மழை பொழிந்துள்ளது.  
 
அதோடு ஈரோடு, பவானி, கொடுமுடி, காமாட்சிபுரத்தில் 10 செ.மீ., புதுக்கோட்டை, பெரம்பலூர், ஆலங்குடியில் 9 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments