Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்வு

Webdunia
சனி, 5 டிசம்பர் 2015 (12:47 IST)
கனமழை காரணமக சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 


 
 
மூன்று நாட்களுக்கு முன் பெய்த கனமழையால், சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரவேண்டிய காய்கறிகள் சரியாக வரவில்லை. பொதுமாக தினசரி 300 லாரிகளில் காய்கறிகள் வரும். ஆனால் மழை காரணமாக வெறும் 110 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் வந்துள்ளது.
 
அதனால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மழை காரணமாக மூன்று நாட்களாக வீட்டிற்குள் முடங்கிய சென்னை வாசிகள் இன்று கோயம்பேட்டில் காய்கறிகளை வாங்க குவிந்தனர். ஆனால் காய்கறிகளின் விலையை கேட்டதும் அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இன்று காலை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.120, முருங்கைக்காய் ரூ. 160, பாகற்காய் ரூ. 100, கோவக்காய் ரூ. 60, முட்டை கோஸ் ரூ. 40, பச்சை மிளகாய் ரூ. 50, மல்லி, புதினா ஒரு கட்டு ரூ. 15–க்கு என்று விற்பனையானது.

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

இந்தியாவில் தாய்ப்பாலை விற்பனை செய்ய அனுமதி இல்லை: மத்திய அரசு அறிவிப்பு..!

Show comments