Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’திரையுலகில் சர்ச்சை’ - இயக்குனர் பாலாவிற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (07:57 IST)
சென்னை உயர் நீதிமன்றத்தில் சினிமா கதாசிரியர் ரத்னகுமார், ஒரு வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அதில், அவரின் குற்றப்பரம்பரை கதையை இயக்குநர் பாலா, கதையாசிரியர் வேல.ராமமூர்த்தி, ஆகியோர் உள்ளிட்ட எவரும் படமாக எடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி இருந்தார்.


 
 
மேலும், மனுவில் அவர் கூறியதாவது, “ இயக்குநர் பாரதிராஜாவுடன் பல படங்களுக்கு கதை எழுதி இருக்கிறேன், அப்போது,  பாரதிராஜாவுடன் உதவியாளராக இருந்த வேல.ராமமூர்த்தி என்பவர் என் ‘குற்றப்பரம்பரை’ கதையை  திருடிவிட்டார், அதை, இயக்குனர் பாலாவை வைத்து  வேறு பெயரில் படமாக்க உள்ளனர். குற்றப்பரம்பரை கதையை இயக்குநர் பாலா, கதையாசிரியர் வேல.ராமமூர்த்தி, ஆகியோர் உள்ளிட்ட எவரும் படமாக எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.”என்றார்.   

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இயக்குனர் பாலா, கதையாசியர் வேல.ராமமூர்த்தி ஆகியோர் இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments