Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு – உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு !

Webdunia
புதன், 6 மார்ச் 2019 (15:55 IST)
திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் எனக் கூறி தொடுக்கப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வியொன்றை எழுப்பியுள்ளது.

திருநங்கை, திருநம்பிகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சென்னை அமைந்தகரையை சேர்ந்த கிரேஸ் பானு என்ற திருநங்கை  பொது நல வழக்கு ஒன்றைத்  தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

கிரேஸ்பானு தரப்பில் ‘உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருநங்கைகளையும், திருநம்பிகளையும் தனி பிரிவாக பிரித்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும், எந்த ஒரு பரிசோதனையும் மேற்கொள்ளாமல் அடையாள அட்டைகள் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

அதைக் கேட்ட நீதிபதி இது சம்மந்தமாக தமிழக அரசு இன்னும் இரண்டு வாரங்களில் இது குறித்து பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை மார்ச் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments