Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா என்று பாடிய வாலிபர்: உயர் நீதிமன்றம் அதிருப்தி

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2016 (16:09 IST)
திரைப்படங்களில் வரும் பாடலை பாடி வாலிபர் ஒருவர் சிறுமியை கிண்டல் செய்துள்ளார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி திரைப்பட ஆபாச பாடல்கள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.


சென்னை மணலி பகுதியில் இளைஞர் ஒருவர், சிறுமியை பார்த்து கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா என்று பாடி கிண்டல் செய்துள்ளார்.

அதற்காக அவர் கைது செய்யப்பட்டு, அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி வைத்தியநாதன் கூறியாதவது:-

திரைப்பட துறையினரின் செயல்களுக்கு என்னுடைய அதிருப்தியை தெரிவித்துக்கொள்கிறேன். திரைப்படம் போன்ற ஊடகங்கள் இளைய சமுதாயத்தினரின் வலிமையான குருவாக உள்ளது. இளைய சமுதாயத்தினரின் மனதில் நல்ல எண்ணங்களையும், சமுதாய பொறுப்புகளையும் பதிய வைக்க வேண்டும்.

ஆனால் திரைப்பட பாடல்களில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவது, வன்முறை காட்சிகளை படமாக்குவது போன்ற செயல்களால் நம்முடைய கலாச்சாரத்தை திரைப்படத்துறையினர் சீரழித்து விடுகின்றனர்.

இதன்மூலம் ஒரு நல்ல  சமுதாயத்தை உருவாக்க திரையுலகினர் முன்வர வேண்டும், என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

அடுத்த கட்டுரையில்
Show comments