Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே ரூமில் தங்குவதில் என்ன தவறு?? நீதிமன்றம் கேள்வி

Arun Prasath
சனி, 7 டிசம்பர் 2019 (16:13 IST)
திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறிருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்கியிருந்ததால், அந்த ஹோட்டல் போலீஸாராலும் வருவாய் துறையினராலும் மூடப்பட்டது. ஹோட்டல் மூடப்பட்டதை எதிர்த்து ஹோட்டலின் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ”இந்த ஹோட்டல் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்குவதால் மூடப்பட்டுள்ளது. திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்க கூடாது என்று சட்டம் ஒன்றும் இல்லை. அப்படி இருக்கையில் இதில் என்ன தவறு இருக்கிறது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

திருமணம் ஆகாத தம்பதிகள் சேர்ந்து வாழ்வதில் எவ்வித குற்றமும் இல்லை எனும் போது, இருவரும் சேர்ந்து ஒரே அறையில் தங்குவதில் எவ்வாறு குற்றமாகும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. இதனை தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட ஹோட்டலை இரண்டு நாட்களுக்குள் திறக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments