Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடைக்கானலில் ஹெலிகாப்டர் சுற்றுலா; அமைச்சர் அறிவிப்பு

Webdunia
சனி, 13 மே 2017 (20:48 IST)
விரைவில் தமிழகத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க உள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.


 


 
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்ச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியதாவது:-
 
தேசிய அளவில் அதிக சுற்றுலாப்பயணிகள் வரும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை வகிக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்த உள்ளன. மதுரையை மையமாக்கி ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். 
 
இதற்கான ஆய்வு பணிகள் நடைப்பெற்று வருகிறது. விரைவில் தமிழகத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படும், என்றார்.
 
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன் ஆந்திரா மாநிலத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
மதுரையை மையமாக கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கட்டாயம் கொடைக்கானல் பகுதியில் இத்திட்டம் செயல்படும். இனி கொடைக்கானலை ஹெலிகாப்டர் மூலம் சுற்றிப் பார்கலாம். 

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை..! கடன் பிரச்சினையால் விபரீத முடிவு.!!

கனமழையால் தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் சேதம்.!

குற்றால அருவிகளில் குளிக்கலாம்.. மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments