Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் கனமழையை அடுத்து கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னையில் கனமழையை அடுத்து கடும் போக்குவரத்து நெரிசல்
, செவ்வாய், 1 டிசம்பர் 2015 (13:31 IST)
சென்னையில் பெய்துவரும் கனமழையை அடுத்து, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
 

 
கடந்த சில தினங்களாக விட்டிருந்த கனமழை நேற்று நள்ளிரவில் முதல் மீண்டும் தொடர ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து சாலைகளில் தண்ணீர் தேங்க ஆரம்பித்தது.
 
இதனையடுத்து சென்னை அம்பத்தூர், ஆவடி, கோயம்பேடு, வளசரவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, குரோம்பேட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியது.
 
இதனால் இரு சக்கர வாகனங்களும், கார்களும் தண்ணீரில் தத்தளித்தன. அண்ணா சாலை, காந்தி மண்டபம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிண்டி, ஜி.எஸ்.டி. சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளுமே வெள்ளத்தில் மிதந்தன.
 
மேலும் இதையொட்டியுள்ள பகுதிகளின் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் அலுவலகத்திற்கு செல்வோரும் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னை வாசிகளின் இயல்பு வாழ்க்கை மீண்டும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil