Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் இந்த அளவிற்கு மழை பாதிப்புகள் ஏற்பட காரணம் முக ஸ்டாலின்: சைதை துரைசாமி

சென்னையில் இந்த அளவிற்கு மழை பாதிப்புகள் ஏற்பட காரணம் முக ஸ்டாலின்: சைதை துரைசாமி
, சனி, 28 நவம்பர் 2015 (08:26 IST)
சென்னையில் இந்த அளவிற்கு மழை பாதிப்புகள் ஏற்பட காரணம் இதற்கு முன்பு மாநகராட்சி மேயராக இருந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தான் என்று மேயர் சைதை துரைசாமி குற்றம் சாட்டியுள்ளார்.


 
சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய அவர் "சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் 25 இடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளே என்றும் மாநகராட்சி மன்றத்தில் பேசிய அவர் சென்னையில் 859 இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதில் 772 இடங்களில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளது" என்றும் குறிப்பிட்டார். 
 
சென்னை மாநகராட்சியில் பெரிய மழை பாதிப்புகள் ஏற்பட காரணம் இதற்கு முன்பு மாநகராட்சி மேயர்களாக இருந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மா.சுப்ரமனியன் தான் என்று அவர் குற்றம் சாட்டினார்.
 
இதற்கு முன்னதாக, வடகிழக்கு பருவமழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி மேயர் பதவி விலக வலியுறுத்தி திமுக கவுன்சிலர்கள் கோஷமிட்டனர். இதனால்  அவர்களை அனைவரையும் வெளியேற்ற மேயர் உத்தரவிட்டதை தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil