Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 14 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

Mahendran
திங்கள், 22 ஏப்ரல் 2024 (18:50 IST)
தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இன்று 14 மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஏற்கனவே இன்றும் நாளையும் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் இன்று 14 மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் மற்ற மாவட்டங்களிலும் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
இன்று தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில்  வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் கொடைக்கானலில் குறைந்தபட்சமாக வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
கோவை, தர்மபுரி, கரூர், மதுரை, நாமக்கல், சேலம் , திருப்பத்தூர், திருச்சி, திருத்தணி, வேலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இனி வரும் நாட்களிலும் அதிக வெப்பம் பதிவாகும் என்றும் எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments