Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை வெளுத்த கனமழை! மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பரிதாப பலி!

Prasanth K
சனி, 23 ஆகஸ்ட் 2025 (08:48 IST)

சென்னையில் நேற்று இரவு முதலாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அவ்வாறாக நேற்று மாலை முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.

 

இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சேர்ந்துள்ள நிலையில் அவற்றை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில் இன்று காலை தூய்மை பணியாளர் வரலட்சுமி (30) பணிக்கு செல்ல கண்ணகி நகரில் சென்றபோது தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்தபோது அதில் அறுந்து கிடந்த மின்சார வயரில் இருந்து வெளியேறிய மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடிபொலி.. கேரளாவுக்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி! - கொண்டாட்டத்தில் சேட்டன்ஸ்!

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை - நெல்லையில் அண்ணாமலை உரை

அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

அங்கிள் என கூறிய விஜய்.. அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன்.. திமுகவினர் ஆத்திரம்..!

உதயநிதி முதல்வராகவும் முடியாது.. ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது: அமித்ஷா

அடுத்த கட்டுரையில்
Show comments