Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (16:10 IST)
தென் தமிழகத்தில் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் கனமழைக்கு  வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை வலுவாக உள்ளது. தமிழகத்தில் 17 இடங்களில் கனமழையும், 3 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது.
 
தென் தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. தென் மேற்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு  பகுதி நிலவி வருகிறது.
 
தென் தமிழகத்தில், டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  வட தமிழகத்தில ஒருசில இடங்களில் மழை வாய்ப்பு உள்ளது. மேலும், காவிரி டெல்டா, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில்  மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments