Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (16:10 IST)
தென் தமிழகத்தில் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் கனமழைக்கு  வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை வலுவாக உள்ளது. தமிழகத்தில் 17 இடங்களில் கனமழையும், 3 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது.
 
தென் தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. தென் மேற்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு  பகுதி நிலவி வருகிறது.
 
தென் தமிழகத்தில், டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  வட தமிழகத்தில ஒருசில இடங்களில் மழை வாய்ப்பு உள்ளது. மேலும், காவிரி டெல்டா, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில்  மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments