Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கனமழை; போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (10:44 IST)
சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை செய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.


 

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து சென்னையில் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
 
அடையாறு, கோடம்பாக்கம், திருவலிக்கேணி, கிண்டி, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
 
சென்னையில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வானக ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழச்சி அடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments