இன்றிரவு கனமழை பெய்யும் பகுதிகள்: சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

Siva
செவ்வாய், 19 நவம்பர் 2024 (17:21 IST)
இன்றிரவு 1 மணி வரை கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது

தமிழகத்தில் மழை குறித்த தகவல்களை அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வரும் நிலையில் இன்று இரவு 1 மணி வரை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை இடி மின்னலுடன் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வங்கக்கடலில் வரும் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறிய நிலையில் அதன் பின்னர் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 27 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

இறக்கையில் திடீர் தீ.. நொடிப்பொழுதில் வெடித்து சிதறிய விமானம்! - நெஞ்சை உலுக்கும் வீடியோ!

சரக்கு ரயில் - பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து.. 11 பேர் பலி.. 20 பயணிகள் நிலை என்ன?

உதவி கேட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியாமல் திணறிய காவல்துறை! - எடப்பாடி பழனிசாமி தாக்கு!

பெண்கள் குளிக்கும் அறையில் ரகசிய கேமிரா.. ஓசூர் டாடா நிறுவனத்தில் பெரும் பதட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments