Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Mahendran
சனி, 9 நவம்பர் 2024 (08:24 IST)
இன்று காலை பத்து மணிக்குள் தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவம் மழை தீவிரமடைந்ததால், அதன் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது.
 
இந்த நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்ற இருப்பதை எடுத்துக் கொண்டு, தமிழகத்தில் மேலும் மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments