Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 31 வரை கனமழை.. இன்று 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
சனி, 25 மே 2024 (15:19 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் மே 31ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று மூன்று மாவட்டங்களுக்கு அதிக மழை பெய்யும் என்ற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது என்றதும் குறிப்பாக வங்க கடலில் தோன்றி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற இருப்பதை அடுத்து தமிழக கடற்கரையோர பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இன்று காலை ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் சற்று முன் மூன்று மாவட்டங்களுக்கு கன மழை பெய்யும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று கூறிய சென்னை வானிலை ஆய்வு மையம் மே 31ஆம் தேதி வரை தமிழகம் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments