Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்டா, தென் மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (07:30 IST)
அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாகவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் சமீபத்தில் புயல் காரணமாக கன மழை பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டது என்பது இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ஒரு பக்கம் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அரபிக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக  டெல்டா மாவட்டங்களிலும் மற்றும் தென் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக  நீலகிரி, கோயம்புத்தூர்,  திருப்பூர்,திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எனவே மேற்கண்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments