Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்டா, தென் மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (07:30 IST)
அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாகவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் சமீபத்தில் புயல் காரணமாக கன மழை பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டது என்பது இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ஒரு பக்கம் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அரபிக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக  டெல்டா மாவட்டங்களிலும் மற்றும் தென் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக  நீலகிரி, கோயம்புத்தூர்,  திருப்பூர்,திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எனவே மேற்கண்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

தங்கத்தின் மதிப்பில் எத்தனை சதவீதம் வரை கடன் பெற அனுமதி: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments