Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓரிரு மணி நேரத்தில் சென்னை உள்பட 19 மாவட்டங்களில் கனமழை !

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (15:33 IST)
இன்னும் ஒரு மணி நேரத்தில் சென்னை உள்பட 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
வங்கக் கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஏற்கனவே என்று ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில் தற்போது இன்னும் ஒரு மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
சென்னை, செங்கல்பட்டு, இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்னும் ஒரு மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் மாவட்டங்களில் இன்று காலை 6 மணி முதல் 12 மணி வரை 17 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் யுபிஐ சேவை திடீர் முடக்கம்! அதிர்ச்சியில் டிஜிட்டல் பயனாளிகள்..!

1 மது பாட்டில் வாங்கினால், 1 மதுபாட்டில் இலவசமா? அரசின் சலுகை அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் கண்டனம்..!

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு

மீண்டும் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம்: ஆசிரியர் தேர்வு வாரியம்.

அடுத்த கட்டுரையில்
Show comments