Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 5 நாட்களிலும் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (08:37 IST)
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த ஐந்து நாட்களிலும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது
 
திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்பட 8 மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
அடுத்த இரண்டு நாட்களில் சென்னையில் உள்ள சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments